img
செய்திகள்இலங்கை

தென்னை அபிவிருத்தி சபை தலைவர் இராஜினாமா!!

Share

தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்கவை பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னை கித்துள் பயிர்ச்செய்கை ஊக்குவிப்பு மற்றும் கைத்தொழில் பொருட்கள் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதான இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 5ஆம் திகதி பதவியை இராஜினாமா செய்யுமாறு அறிவிக்கப்பட்டதாகவும், அதன் பிரகாரம் இராஜினாமா கடிதம் தமக்கு அனுப்பி வைக்கப்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்ட அறிவித்தலின் பிரகாரம் பதவியை இராஜினாமா செய்யுமாறு தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்கவுக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ராகம மருத்துவ பீடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட வாகனம் தென்னை அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானது என்பதால் அதன் தலைவரே பொறுப்பேற்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர் பதவி விலகவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் அமைச்சு மட்டத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செயலாளர் மேலும் தெரிவித்தார்.

#SrilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...