velukumar
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசு சதி புராணம் பாடும் கோமாளி அரசு!!

Share

” இது வெத்து வேட்டு அரசு. வேலைத்திட்டங்கள் எதுவும் அற்ற வெற்று அரசு. எதற்கெடுத்தாலும் ‘சதி’….’சதி’ யென ‘சதி’ புராணம்பாடும் கோமாளி அரசு.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

நாவலப்பிட்டிய பகுதியில் இன்று இடம்பெற்ற ஆன்மீக நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டை ஆளுகின்ற இந்த அரசு வெற்று அரசாகும். அதனிடம் உரிய வேலைத்திட்டங்கள் இல்லை. இது உள்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல முழு உலகுக்குமே தெரியும். நல்லாட்சியின்போது முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கு திறப்பு விழா நடத்தி அகம் மகிழ்கின்றனர்.

ஊழல் மோசடிகள் மற்றும் சதித்திட்டங்கள் ஊடாக ஆட்சிக்கு வந்த இந்த அரசு, தற்போது எதற்கெடுத்தாலும் ‘சதி’ புராணம் பாடுகின்றது. சமையல் எரிவாயு வெடித்தாலும் சதி, நாட்டில் மின்வெட்டு அமுலானாலும் சதியென காரணம்கூறுகின்றனர். மக்களை ஏமாற்றவே அவர்கள் அவ்வாறு செயற்படுகின்றனர். ஆனால் அவர்களின் நாடகத்தை நாட்டு மக்கள் தற்போது புரிந்துகொண்டுள்ளனர்.

இந்த அரசு தன்னைசூழ இராணுவத்தை வைத்துக்கொண்டுள்ளது. எனவே, சதி இடம்பெறுகின்றதெனில் அதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும். மாறாக பூச்சாண்டி அரசியல் நடத்தக்கூடாது.

அதேவேளை, நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால் இன ஒற்றுமை அவசியம். ஆனால் நுவரெலியாவில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியும், கலாச்சாரமும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தேசிய நிகழ்விலும் தமிழுக்கு இடமில்லை.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 64a7f7facdef2 1
இலங்கைசெய்திகள்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்: பரத் தர்ஷன் இயக்கத்தில் ‘ஓ சுகுமாரி’ திரைப்படத்தில் நடிக்கிறார்!

தமிழ் சினிமா ரசிகர்களால் கவனிக்கப்படும் பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ், இப்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக...

Eggs 848x565 1
இலங்கைசெய்திகள்

வெள்ளத்தால் முட்டைத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு – பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை!

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அதிக அளவில் கோழிகள் இறந்ததன் காரணமாக, எதிர்காலத்தில் முட்டைகளுக்குத் தட்டுப்பாடு...

854660 untitled 2
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர் குடும்பங்களுக்கு நிதியுதவி: வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவிப்பு!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, புலம்பெயர்ந்துள்ள இலங்கைத் தொழிலாளர்களின் குடும்பங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள...

images 8
இலங்கைசெய்திகள்

மின் விநியோகம் வழமைக்குத் திரும்ப நடவடிக்கை: ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

அதிதீவிர வானிலையால் துண்டிக்கப்பட்ட மின்சார இணைப்புகளை வெகு விரைவில் மீள இணைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக...