velukumar
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசு சதி புராணம் பாடும் கோமாளி அரசு!!

Share

” இது வெத்து வேட்டு அரசு. வேலைத்திட்டங்கள் எதுவும் அற்ற வெற்று அரசு. எதற்கெடுத்தாலும் ‘சதி’….’சதி’ யென ‘சதி’ புராணம்பாடும் கோமாளி அரசு.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

நாவலப்பிட்டிய பகுதியில் இன்று இடம்பெற்ற ஆன்மீக நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டை ஆளுகின்ற இந்த அரசு வெற்று அரசாகும். அதனிடம் உரிய வேலைத்திட்டங்கள் இல்லை. இது உள்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல முழு உலகுக்குமே தெரியும். நல்லாட்சியின்போது முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கு திறப்பு விழா நடத்தி அகம் மகிழ்கின்றனர்.

ஊழல் மோசடிகள் மற்றும் சதித்திட்டங்கள் ஊடாக ஆட்சிக்கு வந்த இந்த அரசு, தற்போது எதற்கெடுத்தாலும் ‘சதி’ புராணம் பாடுகின்றது. சமையல் எரிவாயு வெடித்தாலும் சதி, நாட்டில் மின்வெட்டு அமுலானாலும் சதியென காரணம்கூறுகின்றனர். மக்களை ஏமாற்றவே அவர்கள் அவ்வாறு செயற்படுகின்றனர். ஆனால் அவர்களின் நாடகத்தை நாட்டு மக்கள் தற்போது புரிந்துகொண்டுள்ளனர்.

இந்த அரசு தன்னைசூழ இராணுவத்தை வைத்துக்கொண்டுள்ளது. எனவே, சதி இடம்பெறுகின்றதெனில் அதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும். மாறாக பூச்சாண்டி அரசியல் நடத்தக்கூடாது.

அதேவேளை, நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால் இன ஒற்றுமை அவசியம். ஆனால் நுவரெலியாவில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியும், கலாச்சாரமும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தேசிய நிகழ்விலும் தமிழுக்கு இடமில்லை.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் முதியவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்று (மார்ச் 31, 2026) முதியவர் ஒருவரின் சடலம்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை!

ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), 05 நாட்கள் உத்தியோகபூர்வ...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் வளர்ச்சி: மார்ச் மாதத்தில் மாத்திரம் 1.7 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடந்த மார்ச்...

Untitled 64
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாநகர சபைகள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

மீதொட்டமுல்ல “பொதுவில் கும்புர” எனும் காணியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளைக் கொட்டியதன் மூலம், கொழும்பு மாநகர...