Basil Rajapaksa 1
செய்திகள்இலங்கை

எரிபொருள் விலை அதிகரிப்பு? – பஸில் விளக்கம்

Share

எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான எண்ணம் தற்போது இல்லை என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்று தெரிவித்தார்.

எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு அனுமதி கோரி அடுத்தவாரம் அமைச்சரவை யோசனை ஒன்று முன்வைக்கப்படவுள்ளதென தகவல் வெளியாகி உள்ளதாகவும் விலை அதிகரிக்க உத்தேசம் உள்ளதா என்றும் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கும்போதே நிதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டால் அது குறித்து மகிழ்ச்சி அடைய முடியாது எனவும் தெரிவித்தார்.

எனினும், எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என்றோ அதிகரிக்கப்படாது என்றோ நிதியமைச்சர் உறுதியாக எதனையும் தெரிவிக்கவில்லை.

அதேவேளை, மத்திய வங்கியால் தொடர்ச்சியாக பணம் அச்சிடப்படுவது தொடர்பிலும் இதன்போது கேள்வி எழுப்பட்டது.

” பணம் அச்சிடுவது தற்போதைக்கு நிறுத்தப்படாது, தனது கையெழுத்திட்ட பணம் வெளிவரும் வரை அது தொடரட்டும்.” – எனவும் நகைச்சுவையாக அமைச்சர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...