Rights to Information
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் மேன்முறையீடுகளை விசாரிப்பதற்கு நடவடிக்கை!

Share

கொழும்பு மாவட்டத்திற்கு வெளியே மேன்முறையீடுகளை விசாரிப்பதற்கு தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

முன்னதாக, இவ்வாறான மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் இதுதொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை பரிசீலித்ததன் பின்னர், கொழும்பிற்கு வெளியே உள்ள பகுதிகளிலும் விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி யாழ்.மாவட்டத்தை மையமாக வைத்து மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை அண்மையில் ஆரம்பமானது.

இன்னும் சில வாரங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மற்றுமொரு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

தகவல்களை வழங்காத அரச நிறுவனங்களுக்கு எதிராக சாத்தியமான நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ளவும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதிகளவான மேன்முறையீடுகள் பிரதேச செயலகங்கள், கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டவை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், அரசாங்க அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு எதிராக கணிசமான எண்ணிக்கையிலான மேன்முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...