event
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொரோனா கால பணி – ஊழியர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு

Share

கொரோனா காலத்தில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

“பெருந்தொற்றுக்கு சவால் விடுத்த மனித நேயத்திற்கு செய்யும் மரியாதை” எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் நிகழ்வின் ஒரு அங்கமாக வடக்கு மாகாணத்திற்கான நிகழ்வு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பெருந்தொற்றின் போது உயிர் நீர்த்தவர்களுக்கு ஒரு நிமிட மெளன வணக்கம் செலுத்தப்பட்டதுடன் பெருந்தொற்றின் போது செயற்பட்ட சகல தரப்பினருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வடக்கு மாகாண அமைச்சின் செயலாளர்கள், முப்படைகளின் உயர் அதிகாரிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் கொவிட் தொற்று காலத்தின் மனித நேயப்பணிகளை முன்னெடுத்த வைத்தியர்கள் பணியாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2 2
இலங்கைசெய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று இரவு முதல் மழை அதிகரிக்கும்!

நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக,...

25 6935546f3239d
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சிவலிங்கம்: தற்போதுள்ள நிலையிலேயே பேண உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சர்ச்சைக்குரிய வகையில் இடமாற்றம் செய்யப்பட்ட சிவலிங்கத்தை, தற்போது தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள நிலையிலிருந்து...

ISBS SRILANKA PRISON
இலங்கைசெய்திகள்

பூஸா சிறைச்சாலை மோதல்: கைதிகள் நடத்திய தாக்குதலில் சிறைச்சாலை அத்தியட்சகர் காயம்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் கைதிகளை இடமாற்றம் செய்ய முற்பட்டபோது ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அத்தியட்சகர்...

images 1 2
இலங்கைசெய்திகள்

அரசியல் தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் விவகாரங்களில் அரசாங்கம் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை – மன்னார் ஆயர்!

புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற முக்கிய விடயங்களில் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை...