Omicron 03 Reuters
செய்திகள்இலங்கை

இலங்கையை தாக்கப் போகும் ஒமிக்ரோன் அலை!!

Share

இலங்கை அண்மைய நாட்களில் ஒமைக்ரோன் வைரஸ் தாக்கக் கூடிய அபாயம் இருப்பதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொவிட் 19 வைரஸ் உலகின் ஏனைய நாடுகளைத் தாக்கிய பின்னரே இலங்கையில் வேகமாக பரவியது. அந்த வகையில் ஓமிக்ரோன் பிறழ்வானது தற்போது தான் உலக நாடுகளில் பரவி இருக்கின்றது.

இலங்கையில் ஓமிக்ரோன் வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் பொறுப்பற்ற விதத்தில் நடந்தால் அது முதன்மை வைரஸாக மாறக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதத்துக்கு பின்னர் இலங்கையில் வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்து வருகின்றது. நாள் ஒன்றுக்கு 800க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மரண வீதமும் அதிகரித்து உள்ளது.

இதற்கிடையில் பாடசாலை மாணவர்களும் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே மூன்றாவது தடுப்பூசியை மக்கள் கட்டாயம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் இலங்கை மீண்டும் ஒரு முழு முடக்கத்திற்கு தயாராக வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் சுகாதார பிரிவு எச்சரித்துள்ளது.

 

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68f95d9f05e86
செய்திகள்அரசியல்இலங்கை

2026 மாகாண சபை தேர்தல்கள் காலவரையின்றி ஒத்திவைப்பு: கட்சிக்குள் ஆழமான கலந்துரையாடல்கள் காரணம்!

அடுத்த ஆண்டு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த மாகாண சபைத் தேர்தல்களைக் காலவரையின்றிப் பிற்போடுவதற்கு அரசாங்கம் அதிகாரப்பூர்வமற்ற முடிவை...

25 68f9483b692e2
செய்திகள்இலங்கை

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை தேவை: சிறைச்சாலை ஆணையர் ஜகத் வீரசிங்கவின் ஆவேச உரை!

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் என்று சிறைச்சாலை ஆணையர் ஜகத் வீரசிங்க வலியுறுத்தியுள்ளார். இவர் நாவலப்பிட்டியில்...

images 1 5
செய்திகள்உலகம்

போர் நிறுத்தம் பின்னணியிலும் நெருக்கடி: கனடா, பிரான்ஸ் உட்பட பல நாடுகளும் நெதன்யாகுவை கைது செய்ய தயார்!

இஸ்ரேல் – காசா போரில் அமெரிக்காவின் தலையீட்டால் தற்போது அமைதி ஒப்பந்தம் (போர் நிறுத்தம்) ஏற்படுத்தப்பட்டுள்ள...

1761139778 Piumi Hansamali Sri Lanka Ada Derana 6
செய்திகள்இலங்கை

“பத்மே எனது அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தத்தான் சொன்னேன்”: பாதாள உலகத் தொடர்பு குற்றச்சாட்டுக்கு பியூமி ஹன்சமாலி விளக்கம்!

பாதாள உலகக் குழுக்களின் தலைவராகக் கருதப்படும் கெஹல்பத்தர பத்மேவுடனான தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக...