peris
செய்திகள்அரசியல்இலங்கை

பொதுவெளியில் விமர்சனங்கள்! – ஏற்க முடியாது என்கிறார் ஜி.எல்.பீரிஸ்

Share

” அரசின் செயற்பாடுகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைப்பதற்கு பங்காளிக்கட்சிகளுக்கு உரிமை இருக்கின்றது. ஆனால் அந்த உரிமையை பொருத்தமான இடத்திலேயே பயன்படுத்த வேண்டும்.” – என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக்கொண்ட கட்சிகள், பொதுவானதொரு இலக்கை அடைவதற்காக, பொதுவானதொரு வேலைத்திட்டத்தின்கீழ் இணைவதுதான் கூட்டணி அரசாகும். அங்கு கருத்துகள் மற்றும் விமர்சனங்கள் இருக்க வேண்டியது ஜனநாயகப் பண்பாகும். பயணம் தவறெனில் அதனை சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு பங்காளிகளுக்கு இருக்கின்றது.

அதற்காக ‘மைக்’ கிடைக்கும் இடங்களில் எல்லாம் பொறுப்பற்ற விதத்தில் கருத்துகளை வெளியிடுவது ஏற்புடைய நடவடிக்கை அல்ல. நாடாளுமன்றக்குழுக் கூட்டம் கூட்டம் நடைபெறும். அமைச்சரவைக் கூட்டமும் இடம்பெறும். அப்போது விமர்சனங்களை முன்வைக்கலாம். தவறுகளை சுட்டிக்காட்டலாம்.

அதனைவிடுத்து கூட்டு பொறுப்பைமீறும் வகையில் பொதுவெளியில் விமர்சங்களை முன்வைப்பது ஏற்புடைய நடவடிக்கை அல்ல.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...