america canada
செய்திகள்உலகம்

வெளிநாட்டிற்குள் நுழைய முயன்ற அகதிகள்: வாகனத்திற்குள்ளேயே பனியில் உறைந்து பலி!

Share

பனியில் உறைந்து இந்தியர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அமெரிக்கா-கனடா எல்லையில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் அண்டை நாடான கனடா வழியாக, சட்டவிரோதமாக அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைகின்றனர்.

மனிதர்களைக் கடத்தும் கடத்தல்காரர்கள் அகதிகளிடம் இருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு, அவர்களை அமெரிக்காவுக்குள் கடத்திக்கொண்டு விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இந்தநிலையில், சட்டவிரோதமாக அகதிகள் சிலரை வேனில் அடைத்து அமெரிக்காவுக்குள் கடத்தி செல்ல முயன்றபோது, அமெரிக்காவின் வடக்கு டகோடா மாகாணத்துக்கு அருகே கனடா எல்லையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் குறித்த வேனைத் தடுத்து நிறுத்தி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களின் சோதனையில் குறித்த வேனுக்குள் ஒரு பச்சிளம் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை 4 பேர் பனியில் உறைந்து, உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, கடத்தல்கார ர் ஒருவரான ஸ்டீவ் ஷாண்ட் (வயது 47) என்பவரைக் கைது செய்து விசாரணையினை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில், பனியில் உறைந்து இறந்தபோன 4 பேரும் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...