mano
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியின் போக்கு சற்றும் மாறவில்லை! – சலிப்படையும் மனோ

Share

ஜனாதிபதியின் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இன்றைய பாராளுமன்ற உரை தொடர்பில் தனது முகநூலில் கருத்து வெளியிட்டுள்ள மனோ கணேசன்,

எதிர்வரும் மூன்று வருடங்களுக்கான தன்னுடைய அரசின் கொள்கையை விளக்கி நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி  இன்று உரையாற்றினார். அவரது உரையில் நாட்டில் காணப்படும் இனப் பிரச்சினையை பொருளாதார பிரச்சினையாகவே பார்க்கும் தனது கொள்கையில் மாற்றம் ஏற்படவில்லை என்பதை தெளிவாக விளக்கியுள்ளார்.

ஜனாதிபதியின் உரை நிறைவுபெற்றதை அடுத்து நான் எனக்கு அருகில் அமர்ந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை அவதானித்தேன். அவருடன் நான் உரையாடியபோது அவர் சலிப்புடன் காணப்பட்டார். அவரின் இந்த நிலை எனக்கு மிக மன வருத்தத்தை தந்தது – என தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...