1616843907595
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியின் விருந்தை புறக்கணித்த கூட்டமைப்பு

Share

ஜனாதிபதியால் வழங்கப்பட்ட தேநீர் விருந்துபசாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்தது என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

9 ஆவது நாடாளுமன்றத்தின் 2 ஆவது கூட்டத்தொடர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்துடன், ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையும் இடம்பெற்றது.

ஜனாதிபதியின் உரை முடிந்ததும் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

அதன்பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் ஜனாதிபதியால் தேநீர் விருந்துபசாரம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் புறக்கணித்துள்ளனர்.

” தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு பற்றி ஜனாதிபதி எதையும் குறிப்பிடவில்லை. கொள்கைகளை விட்டுவருமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார். கொள்கை என்பது மக்கள் எமக்கு வழங்கிய ஆணை. அதனை மீறி செயற்படமுடியாது. எனவே, ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பின் அர்த்தம் புரிவில்லை.” – எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...