Anantha Palitha
இலங்கைஅரசியல்செய்திகள்

எரிபொருளுக்காக நிதியை விடுவிக்குக- கோரும் ஆனந்த பாலித

Share

எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு நிதியை விடுவிக்க வேண்டும். இதற்காக இலங்கை மத்திய வங்கிக்கு அறிவுறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்;

நாடு பாரிய மின்வெட்டுக்கு முகம்கொடுக்கும். எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவின் கருத்துக்கள் எவ்வாறாயினும், நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக 300-900 மெகாவோட் மின்சாரம் மாத்திரமே எரிபொருள் வழங்கல் இன்றி உற்பத்தி செய்ய முடியும்.

தற்போது துறைமுகத்தில் உள்ள எரிபொருள் கப்பல்கள் தொடர்பில் அமைச்சர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கப்பல்கள் விடுவிக்கப்படவில்லை எனில், மின்சார சபை, தொழிற்சாலைகள் மற்றும் பொதுமக்களுக்கு எரிபொருள் கிடைக்காது.

இந்த நிலை தொடர்ந்தால் ரயில் சேவையும் பாதிக்கப்படும் என்றும் தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித கோரிக்கை விடுத்துள்ளார்.

#SrilankaNewws

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் முதியவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்று (மார்ச் 31, 2026) முதியவர் ஒருவரின் சடலம்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை!

ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), 05 நாட்கள் உத்தியோகபூர்வ...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் வளர்ச்சி: மார்ச் மாதத்தில் மாத்திரம் 1.7 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடந்த மார்ச்...

Untitled 64
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாநகர சபைகள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

மீதொட்டமுல்ல “பொதுவில் கும்புர” எனும் காணியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளைக் கொட்டியதன் மூலம், கொழும்பு மாநகர...