ArunSiddarth
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவிகேயின் கருத்து சிறுபிள்ளைத்தனமானது – அருண் சித்தார்த் சாடல்

Share

வரலாற்று புகழ்பெற்ற ஆரியகுளம் நாகவிகாரை பற்றி சி.வி.கே.சிவஞானம் தெரிவித்த கருத்து தொடர்பாக பொறுப்புடன் மக்கள் முன் ஆதாரங்களை வெளியிட வேண்டுமென யாழ் சிவில் சமூக நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் அருண் சித்தார்த் தெரிவித்தார்.

நேற்று (16) தனியார் விடுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

ஆரியகுளம் நாகவிகாரை வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாகும். சி.வி.கே.சிவஞானம் ஒரு மூத்த அரசியல்வாதி. ஆனால் அவர் இவ்வாறு பொறுப்பற்ற விதமாக நாகவிகாரை காணி சிவன் கோவிலுக்குரியது என எவ்வித ஆதாரமும் இல்லாத ஒரு கருத்தை சொல்வதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

இது மதங்களுக்கிடையில் வன்முறையையும் இனங்களுக்கிடையே குரோதத்தையும் ஏற்படுத்தும்.

ஆரியகுளம் நாகவிகாரை பற்றி சி.வி.கே.சிவஞானம் தெரிவித்த கருத்து தொடர்பாக பொறுப்புடன் மக்கள் முன் ஆதாரங்களை வெளியிட வேண்டும். சிறுபிள்ளைத்தனமாக அறிக்கைகளை மாத்திரம் விடக்கூடாது என்றார்.

யாழ் சைவ பௌத்த சங்கமும் யாழ் அம்பேத்கர் இயக்கமும் இணைந்து ஊடக சந்திப்பை மேற்கொண்டன.

#SrilankaNewws

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 6535db6a64ba7
செய்திகள்இலங்கை

மோசமான காலநிலையால் இலங்கையில் 5 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள் பாதிப்பு – ஐக்கிய நாடுகள் சபை கவலை!

இலங்கையில் அண்மைக் காலமாக நிலவி வரும் சீரற்ற காலநிலையால் சுமார் 527,000 சிறுவர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக...

articles2FRGAP8jR5fJmot12PYdxp
செய்திகள்இலங்கை

62 பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கு நியமனம்: வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தூரப்பகுதிகளுக்கு முன்னுரிமை!

இலங்கை சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கில், 62 புதிய பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கான நியமனக் கடிதங்கள்...

25 6950d161858e7
செய்திகள்உலகம்

சீனக் கிராமத்தில் வினோத சட்டம்: வெளியூர் திருமணம் மற்றும் குடும்பச் சண்டைகளுக்குப் பாரிய அபராதம்!

தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள லிங்காங் (Lincang) மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம், திருமணம்...

FB IMG 1764515922146 818x490 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளி பாதிப்பு: 79 சதவீத தொடருந்து மார்க்க புனரமைப்புப் பணிகள் நிறைவு!

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட தொடருந்து மார்க்கங்களில் 79 சதவீதமான...