Rice
செய்திகள்இலங்கை

வரி செலுத்தின் எவரும் அரிசியை இறக்குமதி செய்ய முடியும்! – அரசு அனுமதி

Share

நாட்டில் எவரும் அரிசியை இறக்குமதி செய்யலாம் என வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சந்தையில் தற்போது அரிசியின் விலை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் முகமாக அரிசியை இறக்குமதிசெய்வதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இறக்குமதியாளர்கள், இறக்குமதி செய்யும் ஒரு கிலோ அரிசிக்கு 25 சதம் வரி செலுத்தி அரிசியை இறக்குமதி செய்யலாம்.

500 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சதொச நிறுவனங்கள் ஊடாக இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலை சந்தையில் 150 ரூபாவை விட அதிகரிக்க சந்தர்ப்பம் வழங்கப்படாது – என்றார்.

இதேவேளை, இறக்குமதி செய்யப்பட 500 வரையான அரிசி கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...