namal
அரசியல்அரசியல்இலங்கைசெய்திகள்

மக்களின் செல்வாக்கு சரிந்துள்ளது: ஏற்றுக்கொண்ட நாமல்!

Share

ராஜபக்சக்களுக்கு காணப்படும் மக்கள் செல்வாக்கில் சரிவு ஏற்பட்டுள்ளதனை தாம் ஒப்புக்கொள்வதாகவும் இது தற்காலிகமானது எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்

ஆங்கில பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது நாமல் ராஜபக்ச இதனை ஒப்புகொண்டார்.

இதுவரை காலம் ராஜபக்சக்களுக்கு காணப்பட்ட மக்கள் ஆதரவில் சரிவு ஏற்பட்டுள்ளது என்பதனை தான் ஒப்புக்கொள்வதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எந்தவொரு அரசியல்வாதிக்குமான மக்கள் செல்வாக்கு எல்லா காலங்களில் உச்சத்திலேயே இருப்பதில்லை என்பதனை புரிந்து கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார். தலைவர்களின் மக்கள் செல்வாக்கு தளம்பும் நிலையுடையது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ராஜபக்சக்கள் எப்போதும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியலில் ஈடுபட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

சேதன உரப் பயன்பாட்டுக்கு மாறிய தீர்மானமே மக்கள் ஆதரவில் தாக்கம் செலுத்தியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

#Srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...