Sivajilingam 1
இலங்கைஅரசியல்செய்திகள்பிராந்தியம்

ஆளுநர் நிகழ்ச்சி வருவதாக இருந்தால், நாய் வந்து பார்க்கிறது- என்ன நடக்கிறது?

Share

வடக்கு மாகாண ஆளுநரின் சலுகைகள் குறித்த நாங்கள் பேசுவோம். எதற்காக இவ்வளவு ஆளணி. நீங்கள் போய் கொழும்பில் இருந்து பாருங்கள். ஆளுநர் வெட்டைக்குள் இறங்குவதில்லை.

இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்று (06) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

அதுமட்டுமல்லாமல் ஆளுநர் ஒரு நிகழ்ச்சி வருவதாக இருந்தால், நாய் வந்து பார்க்கிறது. ஏன் இங்கு வெடிகுண்டு இருக்கிறதா? ஏன் இங்கு ஆளுநருக்கு யாரும் வெடிகுண்டு வைக்கப்போகிறார்களோ? அல்லது நீங்கள் வைக்கவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களோ?

ஆனால், ஆரிய குள விவகாரத்தில் மாநகர முதல்வைப் பணிய வைக்கிற முயற்சியை தமிழினம் ஒருபோதும் அனுமதிக்காது. நிச்சயமாக ஆளுநருக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பதற்கு நாம் தள்ளப்படுவோம்.

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடைபிடிப்பார் என்று கூறுவதைப்போல ஆளுநரும் தற்போது குடை பிடிக்கிறாரா என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...