laugfs gas
செய்திகள்இலங்கை

சிலிண்டர்கள் சந்தைக்கு வர தாமதமாகும்! – லாப்ஸ் நிறுவனம் அறிவிப்பு

Share

மக்களுக்கு தேவையான எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க ஏறத்தாழ 3 வாரங்கள் தேவை என லாப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் லாப்ஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச் வேகபிடிய தெரிவிக்கையில்,

ஒரு நாளைக்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் முன்னர் விநியோகிக்கப்பட்டு வந்தன. ஆயினும் தற்போது சில பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், எரிவாயு விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அண்மையில் எரிவாயு நிரப்புதல் மற்றும் எரிவாயு நிரப்புதலின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் நீதிமன்றம், தரநிலைகள் நிறுவனம் மற்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை ஆகியவற்றின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது நாடளாவிய ரீதியில் அனைத்து பகுதிகளுக்கும் நாளாந்தம் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையான சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...