gover
செய்திகள்அரசியல்இலங்கை

அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா மேலதிக கொடுப்பனவு

Share

அரச ஊழியர்களுக்கும் இம்மாதம் முதல் மாதாந்தம் 5 ஆயிரம் ரூபா விசேட கொடுப்பனவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்று தெரிவித்தார்.

இலங்கையில் 14 லட்சத்து 50 ஆயிரத்து 450 அரச ஊழியர்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படும்.

6 லட்சத்து 66 ஆயிரத்து 480 பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர். அவர்களுக்கும் 5 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவு இம்மாதம் முதல் வழங்கப்படும். சமுர்த்தி பயனாளிகளுக்கு மேலதிகமாக 1000 ரூபா வழங்கப்படும். அவர்கள் தற்போது 3 ஆயிரத்து 500 ரூபாவை மாதாந்தம் பெறுகின்றனர்.

மலையக பெருந்தோட்ட மக்களுக்கும் மாதாந்தம் 15 கிலோ கோதுமைமா மானிய நிலையில் வழங்கப்படும். ஒரு கிலோவுக்கு 40 ரூபா குறைக்கப்பட்டு, கிலோ 80 ரூபா வீதம் வழங்கப்படும்.

புதிதாக எந்த வரியையும் அறவிடமாட்டோம்.” – என்றும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 34
செய்திகள்இந்தியா

சாத்தான்குளம் வழக்கு: 9 காவல்துறை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

இந்தியாவையே உலுக்கிய தமிழ்நாட்டின் சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 காவல்துறை அதிகாரிகளுக்கும்...

world 33
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் கையிருப்பு சொத்துக்கள் மார்ச் மாதத்தில் வீழ்ச்சி: மத்திய வங்கி வெளியிட்ட புதிய அறிக்கை!

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு 2026 மார்ச் மாத இறுதியில் 3.5 சதவீதம் வரை...

world 32
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கில் அமைதி நிலவ வேண்டும்: ஜனாதிபதி அநுரகுமார வலியுறுத்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் தணிந்து விரைவில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே...

world 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆற்றில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு: அடையாளம் காண்பதில் சிக்கல்!

நோர்வூட் பகுதியில் பாயும் கெசல்கமுவ ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் இன்று (ஏப்ரல்...