pearl one news Kanapathipillai Mahesan
செய்திகள்இலங்கை

யாழ். மோட்டார் திணைக்கள சேவைகள் இடைநிறுத்தம்

Share

யாழ். மோட்டார் திணைக்கள சேவைகள் இடைநிறுத்தம்

யாழ். மாவட்டச் செயலக மோட்டார் போக்குவரத்து பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழில் கொரோனாத் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து செல்வதுடன், இறப்புகளும் அதிகரித்து செல்கின்றன.

நிலைமையைக் கருத்தில் கொண்டு, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நடவடிக்கைகள் இன்று முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதன் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு பின்னர் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் செயற்படுத்தப்படும்.

இதேவேளை, மோட்டார் திணைக்களத்தின் எழுத்துப் பரீட்சை மற்றும் பிரயோக ஓட்டப் பயிற்சி என்பவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மோட்டார் போக்குவரத்து பிரிவை பொதுமக்கள் தொடர்புகொள்வதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் பொதுமக்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்.

ஏற்கெனவே மோட்டார் திணைக்களம் அறிவித்துள்ள புதுப்பித்தல் நடவடிக்கைகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அவசரப்படாது அத்தியாவசிய தேவைகளை மாத்திரம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும்’ – என மாவட்டச் செயலாளர் கூறினார்.

 

 

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
07 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாவட்டங்களுக்கு நாளை கடும் வெப்ப எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்!

இலங்கையின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் நாளை (மார்ச் 22, 2026) வெப்பமான வானிலை நிலவக்கூடும்...

06 17
செய்திகள்இந்தியா

வீட்டு வேலைகளைக் கணவனும் பகிர வேண்டும்: விவாகரத்து வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் அறிவுரை!

வீட்டு வேலைகளைக் கணவனும் மனைவியும் சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், மாறிவரும் காலத்திற்கு ஏற்பக்...

05 19
செய்திகள்உலகம்

டியாகோ கார்சியா மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: அமெரிக்காவின் போர் வியூகத்தை மாற்றும் புதிய திருப்பம்!

இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள அமெரிக்க-பிரித்தானிய கூட்டு இராணுவத் தளமான டியாகோ கார்சியாவை (Diego Garcia) இலக்கு...

04 19
செய்திகள்இலங்கைஉலகம்

கியூபாவில் மின்சாரத் தடை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு: குடிநீரின்றித் தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள்!

கியூபாவில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை...