1605930342 All SLTB buses in operation this weekend L
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வடக்கிடம் கடன் கேட்கும் மத்திய போக்குவரத்து சபை!!

Share

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடபிராந்தியத்திலுள்ள 7 சாலைகளிலும் உள்ள நிலையான வைப்பு பணத்தில் 150 மில்லியன் ரூபாவை கடனாகத் தமக்கு அனுப்பி வைக்குமாறு போக்குவரத்து சபையின் தலைமையகம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து வடபிராந்திய முகாமையாளர் 7 சாலைகளுக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

நிதி நெருக்கடியையடுத்து வடபிராந்திய சாலைகளில் இவ்வாறு நிதி கோரப்பட்டுள்ளது. இந்த பணத்தினை 10 தவணைகளில் மீள வழங்குவதாக தலைமையகம் உத்தரவாதமளித்துள்ளது.

எனினும் வாகன உதிரிபாகங்களின் நெருக்கடி நீடிக்கும் நிலையில் சாலைகளில் உள்ள வைப்புப் பணத்தினை தலைமையகத்துக்கு மாற்றவேண்டாம் என வடபிராந்திய இ.போ.ச. தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

#SrilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...