Douglas
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

இந்திய மீனவர்களின் படகு இரணைதீவு மக்களுக்கு! – டக்ளஸ் தேவானந்தா

Share

இரணைதீவு மக்களின் போக்குவரத்து தேவைக்காக அண்மையில் இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகொன்றை கையளிக்க உள்ளோமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கத்தின் தெரிவு இடம்பெற்ற நிலையில் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மயிலிட்டியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளின் நிலையை நாம் பார்வையிட்டோம். இரணைதீவு மக்களின் போக்குவரத்து தேவைக்காக அண்மையில் இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகொன்றை கையளிக்க உள்ளோம்.

இந்தியாவில் இருந்து அழுத்தங்கள் வந்தாலும் இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகள் தற்போது அரசுடமையாக்கப்பட்டுள்ளன.

நாம் நல்லெண்ணத்தை காட்டி இந்திய மீனவர்களை விடுதலை செய்த பொழுதும் இலங்கை மீனவர்கள் இன்றும் இந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்திய அரசு நீதிமன்ற நடவடிக்கையை காரணம் காட்டி செயல்படும் பொழுது நாமும் நீதிமன்ற பொறிமுறை ஊடாகவே செல்ல முடியும் – என்றார்.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
IMG 9924 1024x683 1
செய்திகள்உலகம்

சூடானில் மார்ச் மாதத்துடன் உணவு இருப்பு தீரும் அபாயம்: 700 மில்லியன் டொலர் அவசர நிதியைக் கோருகிறது ஐ.நா!

உள்நாட்டுப் போரினால் பேரழிவைச் சந்தித்துள்ள சூடானில், உடனடியாகக் கூடுதல் நிதி உதவி வழங்கப்படாவிட்டால் மிக மோசமான...

10aa5a71cfd76011153a66552523da5f7560cde2db35ee6d414158cd57f94959
உலகம்செய்திகள்

டோக்கியோவில் மின்தடையால் ரயில் சேவைகள் முடக்கம்: 6.7 லட்சம் பயணிகள் பாதிப்பு!

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இன்று (16) ஏற்பட்ட திடீர் மின்தடை மற்றும் தீ விபத்து காரணமாக...

1735040735 c
செய்திகள்இலங்கை

கிராம அலுவலர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை ஜனவரி 20-ல் ஆஜர்ப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் க....

Keheliya Rambukwella
செய்திகள்இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை: நீதவான் நீதிமன்ற வழக்கு முடிவு!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது புதல்வர் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகப்...