Douglas
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

இந்திய மீனவர்களின் படகு இரணைதீவு மக்களுக்கு! – டக்ளஸ் தேவானந்தா

Share

இரணைதீவு மக்களின் போக்குவரத்து தேவைக்காக அண்மையில் இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகொன்றை கையளிக்க உள்ளோமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கத்தின் தெரிவு இடம்பெற்ற நிலையில் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மயிலிட்டியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளின் நிலையை நாம் பார்வையிட்டோம். இரணைதீவு மக்களின் போக்குவரத்து தேவைக்காக அண்மையில் இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகொன்றை கையளிக்க உள்ளோம்.

இந்தியாவில் இருந்து அழுத்தங்கள் வந்தாலும் இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகள் தற்போது அரசுடமையாக்கப்பட்டுள்ளன.

நாம் நல்லெண்ணத்தை காட்டி இந்திய மீனவர்களை விடுதலை செய்த பொழுதும் இலங்கை மீனவர்கள் இன்றும் இந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்திய அரசு நீதிமன்ற நடவடிக்கையை காரணம் காட்டி செயல்படும் பொழுது நாமும் நீதிமன்ற பொறிமுறை ஊடாகவே செல்ல முடியும் – என்றார்.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...