Murder 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மனைவியின் தகாத உறவு: கணவன் கேட்டதால் அடித்துக்கொன்ற மனைவி!

Share

நுவரெலியா, பீட்ரு பகுதியில் மனைவியால் கணவன் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கணவன், மனைவி இடையே நேற்றிரவு ஏற்பட்ட முரண்பாடு மோதலாக மாறியதையடுத்தே இக்கொலை இடம்பெற்றுள்ளது.

3 பிள்ளைகளின் தந்தையொருவரே (வயது – 44) இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் மனைவிக்கும் பிறிதொரு நபருக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இந்த விடயம் தெரியவர, அது தொடர்பில் மனைவியிடம், கணவர் வினவியுள்ளார். இதன்போது இருவருக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மனைவி, அவரை பொல்லால் கடுமையாகத் தாக்கிக் கொன்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...