Douglas Devananda
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பதைப்போல…: டக்ளஸ் கருத்து!

Share

இந்தியக் கடற்றொழிலாளர்களது எல்லை மீறிய சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையால் எமது கடல்வளங்கள் அழிக்கப்படுகின்றன.

இவ்வாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து, யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் உட்பட பல்வேறு மீனவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக இன்று (24) முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் கலந்துகொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்;

எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. கடல் வளங்களும் அழிக்கப்படுகிறது. மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பதைப்போல யுத்தத்திலிருந்த பாதிப்பிலிருந்து விடுபட்டு மக்கள் வந்துகொண்டிருக்கும்போது, மீண்டும் அந்த அழிவுகளை ஏற்படுத்தும் விதமாகவே செயற்படுகிறார்கள்.

இதுதொடர்பாக இந்தியப் பிரதமர் மோடியுடனும், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடனும் தொலைபேசியில் கலந்துரையாடியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசித் தீர்வைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்ததை அடுத்து தாங்கள் போராட்டத்தை கைவிடுவதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...

Dark AI e1756568647595
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை ஹோட்டல் உரிமையாளர் கொலை: AI தொழில்நுட்பத்தில் உருவான சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு!

தெஹிவளை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம்...