IMG 20211221 WA0022
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் இலத்திரனியல் பொருட்களை திருடிய நபர் கைது!

Share

வீட்டில் இருந்த பெறுமதி வாய்ந்த இலத்திரனியல் உபகரணங்களை திருடிய சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் சீனிவாசகம் வீதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் 43” தொலைக்காட்சி, சீடி பிளேயர் மற்றும் சமையல் அறை இலத்திரனியல் உபகரணங்கள் என்பன களவாடப்பட்டிருந்தன.

குறித்த இலத்திரனியல் பொருட்களை விற்பனை செய்த போது சந்தேகநபரும், விற்பனை செய்ய உதவிய தரகரம் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

30 வயது மதிக்கத்தக்க குறித்த சந்தேகநபர் அச்சுவேலியில் வசித்து வருவதோடு, கடந்த 10 ஆம் திகதி அச்சுவேலி பகுதியில் ஒருவரை தாக்கி மோதிரத்தை பறித்து சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த சம்பவத்தோடு தொடர்புடைய இன்னும் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த 3 சந்தேகநபர்களும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...