sandilipay
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

இணைத்தலைவரை நாடியும் உரிய பயன் கிட்டவில்லை! – சண்டிலிப்பாய் பிரதேச பெண் தொழில் முயற்சியாளர் சுட்டிக்காட்டு

Share

“ இணைத்தலைவரை நாடியும் உரிய பயன் கிட்டவில்லை. மனுக்களை கையளித்தும் இன்னும் தீர்வு இல்லை. இனி என்ன செய்வது,” இவ்வாறு உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினார் சண்டிலிப்பாய் பிரதேச பெண் தொழில் முயற்சியாளர் ஒருவர்.

‘கிராமத்துடனான உரையாடல்’ மூலமான திட்டத்தின்கீழ் பிரதேச அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான பிரதேச மட்டத்திலான கலந்துரையாடல் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் இன்று மாலை நடைபெற்றது.

இதன்போது கருத்துகளை முன்வைப்பதற்கு தொழில் முயற்சியாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அவ்வேளையிலேயே அவர் இவ்வாறு உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினார்.

“ எனது குடும்பம் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டது. இறுதியில் கணவருடைய தொழிலே எனக்கு கை கொடுத்தது.

காரைநகர் முதல் கைதடி வரை 70 வீதமான கடைகளில் எனது உற்பத்தி பொருட்களுக்கு சிறந்த கேள்வியுள்ளது. இதற்கு பலரும் நேசக்கரம் நீட்டினர்.

இரண்டு தொழிலாளர்களுடன் ஆரம்பித்த எனது நிறுவனம் இன்று 14 உறுப்பினர்களுடன் வெற்றி நடைபோடுகிறது. எனினும், விற்பனைக்கான வாகனமொன்று தற்போது தேவைப்படுகின்றது. இது விடயம் தொடர்பில் இணைத்தலைவரை இருமுறை அணுகி மனு கையளித்த போதும் இதுவரை உதவியோ – பதிலோ எனக்கு வழங்கப்படவில்லை.” – என்றார் அவர்.

இதற்கு பதிலளித்த இணைத்தலைவர், அரசிடம் வாகனத் திட்டம் எதுவும் இல்லை. குத்தகை நிறுவனத்துடன் பேச்சு நடத்தி அதனை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கின்றேன் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...