samajwadi MP
இந்தியாசெய்திகள்

பெண் பூப்படைந்தவுடன் திருமணத்தை செய்ய வேண்டும்: எம்.பி. சர்ச்சைப் பேச்சு

Share

பூப்பெய்தியவுடன் பெண்ணை மணம் முடித்து வைக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார்.

பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக உயர்த்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒப்புதல் வழங்கியிருந்தது.

இந்தநிலையில் இதுகுறித்து கருத்துரைக்கையிலேயே சமாஜ்வாதி கட்சி எம்.பி. சயது துபெய்ல் ஹசன் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் கூறுகையில்,

வயதுக்கு வந்த உடன் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். வயதுக்கு வந்த பெண் 16 வயதில் திருமணம் செய்துகொண்டாலும் தவறில்லை.

பெண் 18 வயதில் வாக்களிக்கும்போது ஏன் அதேவயதில் திருமணம் செய்துகொள்ளக்கூடாது?.

ஒரு பெண் கருவுற்றல் வயதையடைந்ததும், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நான் நம்புகிறேன் என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மற்றொரு சமாஜ்வாதி கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஷபீக்கியூர் ரஹ்மான், பெண்களின் குறைந்த பட்ச திருமண வயது 21 என அதிகரிக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரஹ்மான் கூறுகையில்,

இந்தியா ஒரு ஏழை நாடு. அனைவரும் தங்கள் மகள்களை குறைவான வயதிலேயே திருமணம் செய்துவைக்க நினைக்கின்றனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த பிரேரணையை ஆதரிக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக அதிகரித்து, பிரேரணை தாக்கல் செய்யப்பட்டு, அது சட்டமாக நிறைவேற்றப்படவுள்ள நிலையில், பல்வேறுபட்ட சர்ச்சைக் கருத்துக்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...