80ebcdee 238a226f curfew guard
செய்திகள்இலங்கை

தொடர் முடக்கத்துக்கு சாத்தியம்!! – ஆராய்கிறது அரசு!

Share

தொடர் முடக்கத்துக்கு சாத்தியம்!! – ஆராய்கிறது அரசு!

நாட்டில் கொரோனாத் தொற்று அதிகரித்து செல்லும் நிலையில் நேற்று திங்கட்கிழமை தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள இந்த ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் வார இறுதிநாள்களில் முழுமையாக நடைமுறைப்படுத்த வாய்ப்புக்கள் உள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஊரடங்கு அமுல்படுத்தலை ஒரு மாத காலத்துக்கு தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. நாட்டை உடனடியாக முடக்குமாறு பல்வேறு தரப்புகளிடமிருந்தும் அரசுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையிலேயே நாட்டை முழுமையாக முடக்குவது தொடர்பில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
01 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் போதை மாத்திரைகளை விற்ற மருந்தக உரிமையாளர் கைது: 1400 மாத்திரைகள் பறிமுதல்!

மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை இளைஞர்களுக்குப் போதைக்காக விற்பனை...

01 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மசகு எண்ணெய் விலை 150 டொலரை எட்டினால் உலகப் பொருளாதார வீழ்ச்சி: பிளாக்ராக் தலைவர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்...

01 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடி உயர்வு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி...

01 28
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ஈரான்: “ஒருபோதும் இணங்க முடியாது” என அதிரடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யோசனைகளையும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும்...