usa 5
செய்திகள்உலகம்

நாடுகளுக்கிடையே பகைமையை ஏற்படுத்துவது அமெரிக்காவின் நோக்கம் -சீனா

Share

ஜனநாயகம் எனும் தோற்றத்தில் நாடுகளுக்கிடையே பகைமையை ஏற்படுத்துவது அமெரிக்காவின் நோக்கம் என சீனா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா100-க்கும் மேற்பட்ட நாடுகளை அழைத்து ஜனநாயக மாநாடு நடத்தியதை தொடா்ந்து சீனா அமெரிக்காவை கடுமையாக சினந்துள்ளது.

இது குறித்து சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஜனநாயகம் என்ற பெயரில் நாடுகளிடையே வெறுப்புணர்வை உண்டாக்குவதும் பிற நாடுகளோடு யுத்தம் செய்வதும் அமெரிக்காவின் கைவந்த கலையாகும்.

இதன் மூலமாக அமெரிக்கா உலகை அழிவுப் பாதைக்குத்தான் அழைத்து செல்கிறது.

அத்தோடு பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்காக, ஜனநாயகத்தை அமெரிக்கா ஒரு பேரழிவு ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது.

மேலும் ஜனநாயக மாநாட்டை நடத்தியுள்ளதன் மூலம், அந்த அரசியல் முறையை அமெரிக்கா ஒரு கருவியாக்கியுள்ளது எனவும் சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்கா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா தலைமையில் சா்வதேச ஜனநாயக மாநாடு காணொலி மூலம் கடந்த வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

அம் மாநாட்டில் இந்திய பிரதமா் நரேந்திர மோடி உள்பட உலகின் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்குபற்றினார்கள்.

குறிப்பாக அம் மாநாட்டுக்கு, சீனாவுக்கும் ரஷியாக்கும்  அழைப்பு விடுக்கப்படவில்லை.

அதற்கு மாறாக, சீனாவின் ஓா் அங்கமான தைவானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதன் மூலம், தைவானை ஒரு தனி நாடாக அமெரிக்கா மறைமுகமாக அங்கீகரித்துள்ளதேயென கூறலாம்.

தைவானை அமெரிக்கா அழைத்தது சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில்,   நாடுகளுக்கிடையே பகைமை ஏற்படுத்துவது அமெரிக்காவின் நோக்கம் எனத் சீனா தெரிவித்துள்ளது.

#world

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...