taliban 1
செய்திகள்உலகம்

பாகிஸ்தானை தாக்க தயாராகும் தலிபான்கள் – போர் மூழ்கும் அபாயம்

Share

பாகிஸ்தானில் போர் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் தாக்குதல்களை மேற்கொள்ள தலிபான்கள் தயாராகி வருவதாக அந்நாட்டுச்செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் அரசு ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகவும் பாகிஸ்தான் படையினர் தங்கள் அமைப்பினரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரீக்-இ-தலிபான் தீவிரவாத அமைப்பு பாகிஸ்தானின் தலிபான் என அழைக்கப்படுகிறது.

கடந்த 14 ஆண்டுகளாக பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் மற்றும் அந்நாட்டு பொதுமக்கள் மீது தெஹ்ரீக்-இ-தலிபான் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

கடந்த 2014ம் ஆண்டு பெஷாவர் நகரில் உள்ள இராணுவ பள்ளியில் அந்த அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 150 பேர் கொல்லப்பட்டனர்.

அதில் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்புடன் இம்ரான்கான் அரசு கடந்த ஐப்பசி 25ம் தேதி ஆறு அம்ச ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டது.

இதன்படி கடந்த கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை இரு தரப்பும் போர் நிறுத்தம் செய்வது, சிறையில் உள்ள 102 தலிபான்களை விடுதலை செய்வது உள்பட 6 அம்சங்கள் இந்த ஒப்பந்தத்தில் அடங்கியிருந்தன.

இரு தரப்பினருக்கும் மத்தியஸ்தராக ஆப்கானிஸ்தானின் தலிபான் அமைப்பு செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாகிஸ்தான் அரசு அந்த ஒப்பந்தத்தை மீறி விட்டதாகவும் பாகிஸ்தான் படையினர் தங்கள் அமைப்பினரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் தெஹ்ரீக்-இ-தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், ஒரு மாத கால போர் நிறுத்த ஒப்பந்தத்தை கைவிடுவதாக அந்த அமைப்பின் தலைவர் முப்தி நூர் அறிவித்துள்ளார்.

முன்னதாக அவர் வெளியிட்டுள்ள ஒளிப்பதிவுச் செய்தியில், தனது போராளிகளை நள்ளிரவு 12 மணிக்கு முதல் தாக்குதல்களை மீண்டும் தொடங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மத்தியஸ்தர்களிடம் இருந்தோ அல்லது அரசாங்கத்திடம் இருந்தோ பதில் வராத நிலையில், தங்கள் போராளிகள் எங்கிருந்தாலும் தாக்குதல்களை மீண்டும் தொடங்க உரிமை உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து பாகிஸ்தான் பொதுமக்கள் மீது மீண்டும் தெஹ்ரீக்-இ-தலிபான்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தாக்குதல் நடத்துவார்கள் என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

பாகிஸ்தான் தாலிபான்களின் அறிவிப்பு, பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு பெரும் தலையிடியாக உருவெடுத்துள்ளது.

அத்தோடு பாகிஸ்தான் முழுவதும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...

04 22
உலகம்செய்திகள்

மழைக்கும் மத்தியிலும் ஈரான் தலைநகரில் பிரம்மாண்டப் போராட்டம்: உச்சத் தலைவருக்கு ஆதரவு!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் ஈரான் மீது தொடுத்துள்ள போர் இன்று (மார்ச் 24, 2026)...

03 23
செய்திகள்இலங்கை

சீமெந்து விலை 2,250 ரூபாவாக அதிகரிப்பு: கட்டுமாணத் துறை மேலும் நெருக்கடி!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக, கட்டுமாணப் பொருட்களின் விலைகள் மீண்டும்...