k
செய்திகள்உலகம்

புகை பிடிக்க இளைஞர்களுக்கு வாழ்நாள் தடை!

Share

இளைஞர்கள் புகை பிடிக்க வாழ்நாள் தடையொன்றை நியூசிலாந்து அரசாங்கம் பிறப்பித்துள்ளது.

இந்த சட்டம், 14 வயது மற்றும் அதற்கு குறைவானவர்கள் வாழ்நாள் முழுவதும் புகை பிடிக்க தடையாக அமையும்.

நேற்று  அறிவிக்கப்பட்ட இந்த புதிய சட்டம், அடுத்த ஆண்டு அமலுக்கு வரும் எனத் தெரிவித்துள்ளார்கள்.

இந்த சட்டம் ஆண்டுதோறும் சிகரெட் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயதை அதிகரிக்க வகை செய்யும்.

இந்த சட்டம் அமலுக்கு வந்து, 65 ஆண்டுகளுக்கு பிறகுதான் கடைகளுக்கு சென்று சிகரெட் வாங்க முடியும். ஆனால் அவர்கள் தங்களுக்கு 80 வயதாகி விட்டது என்பதை உறுதி செய்ய வேண்டும் .

ஆனால் நடைமுறையில் பல தசாப்தங்களுக்கு முன்பாகவே சிகரெட் பிடிக்கும் பழக்கம் மறைந்து விடும் என்று நியூசிலாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2008-ம் ஆண்டுக்கு பின்னர் பிறந்தவர்கள் சிகரெட்டுகளோ, பிற புகையிலை பொருட்களோ தங்கள் வாழ்நாளில் வாங்க முடியாதென தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் வைத்தியர் ஆயிஷா வெரால் கூறும்போது,

“இளைஞர்கள் ஒருபோதும் புகைபிடிக்க கூடாது என்பதை நாங்கள் உறுதிசெய்ய விரும்புகிறோம்” என தெரிவித்தார்.

நியூசிலாந்து அரசு அமல்படுத்த உள்ள இந்த புதிய சட்டத்தை வைத்தியர்களும், சுகாதார நிபுணர்களும் வரவேற்றுள்ளனர்.

இந்த சட்டம் பற்றி ஒட்டகோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜானட் கூக் கருத்து தெரிவிக்கையில்,

“இந்த சட்டமானது சிகரெட் புகைப்பதை மக்கள் நிறுத்த உதவும் அல்லது குறைக்க உதவும். இதனால் இளைய தலைமுறையினர் நிகோடினுக்கு அடிமையாவது குறைந்து விட கூடிய வாய்ப்பு இருக்கிறது” என தெரிவித்தார்.

இச்சட்டத்தை நியூசிலாந்து மக்கள் வரவேற்றுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 6
செய்திகள்இந்தியா

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா 30 நாட்கள் அனுமதி

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேலிய படைகளுக்கு இடையே நிலவும் தீவிர போர்ச் சூழலால், சர்வதேச...

02 5
செய்திகள்உலகம்

ஈரானில் முழுமையான இணைய முடக்கம்: வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில் இருளில் தவிக்கும் மக்கள்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

01 5
உலகம்செய்திகள்

ஈரான் பள்ளி மீதான வான்வழித் தாக்குதல்: உயிரிழப்புகள் குறித்து தீவிர விசாரணை

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலில், ஈரானின் மினாப் (Minab) பகுதியில் உள்ள பெண்கள்...

06 5
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்: வளைகுடா கடற்பரப்பில் 35,000 பேர் தவிப்பு – ஐ.நா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே வெடித்துள்ள போரினால் வளைகுடா பிராந்தியத்தில் கடுமையான...