Ali Sabry2
செய்திகள்அரசியல்இலங்கை

“போதைக்கைதிகள் சமூகத்திற்கு” திட்டம் ஆரம்பம்!!!

Share

போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள கைதிகளை சமூகத்துடன் இணைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை வீரவிலை திறந்தவெளி சிறைச்சாலையின் பணிகளை பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

போதைப்பொருளுக்கு அடிமையாகி தண்டனை அனுபவிக்கும் சிறைக் கைதிகள் விசேட புனர்வாழ்வளிப்பு நிலையத்தில் சேர்க்கப்பட்டு சமூகமயப்படுத்தி, நாட்டிற்கு நல்ல பிரஜைகளாக மாற்றி புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்படவுள்ளனர்.

போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞர்களை புனர்வாழ்வளிக்கும் நிலையம் ஸ்தாபிக்கப்பட்டு சகல வசதிகளுடனும் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது.

தற்போதைய அரசாங்கம் போதைப் பொருளுக்கு அடிமையாகி சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வருபவர்களை புனர்வாழ்வளித்து சமூகத்திற்கு ஏற்றாற்போல் மாற்றியமைக்கும் திட்டத்தை பலகோடி ரூபாக்களை செலவு செய்து செயற்படுத்தப்படுகின்றது என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...