taliban
செய்திகள்உலகம்

பாதுகாப்பு அதிகாரிகளை குறி வைக்கும் தலிபான்கள்!

Share

ஆப்கானில் தலிபான்கள் பாதுகாப்பு அதிகாரிகளை குறி வைப்பதாக மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆப்கானில் கடந்த ஆகஸ்ட் மாதம், அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து, ஆப்கான் முழுவதையும் தலிபான்கள் கைப்பற்றினர்.

தலிபான்கள் ஆட்சி அமைத்த பிறகு, முன்னாள் அதிபர் அஸ்ரப் கானி ஆட்சியின்போது பணிபுரிந்த பாதுகாப்புப் படையினர், காவல்துறையினர் உள்பட அனைத்து அரசு அலுவலர்களுக்கும் பொது மன்னிப்பு அளிப்பதாகத் தலிபான்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தலிபான்கள் ஆட்சி அமைந்த பிறகு மட்டும் ஆப்கான் இராணுவம், காவல்துறையினர், புலனாய்வு அலுவலர்கள் என மொத்தம் 47 பேர் கடத்தப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணையம் கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டது.

இப்பிரச்சனை பெரும் சர்ச்சையை அங்கு கிளப்பியுள்ளது.

ஆப்கானில் முந்தைய ஆட்சியில் பணிபுரிந்த நபர்களைக் குறிவைத்து அவர்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளைத் தலிபான்கள் நிறுத்த வேண்டும் என அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் உலகநாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.

அவ் அறிக்கையில்,

ஆப்கானில் இடம்பெறும் கடத்தல்கள் கடுமையான மனித உரிமை மீறல்கலாகும்.

இக் கடத்தல் நடவடிக்கைகள் தலிபான் அறிவித்த பொது மன்னிப்புக்கு முரணானவை. இந்த நடவடிக்கைகள் தொடருமாயின் தலிபான்கள் மீது கடும் நடவடிக்கைள் எடுக்கப்படுமென உலக நாடுகள் எச்சரித்துள்ளன.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 5
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியினை விட்டு வெளியேறுவதாக யாழ். உறுப்பினர் பகிரங்க அறிவிப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக...

31 5
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின்...

6 19
இலங்கைசெய்திகள்

முற்றாக முடங்கி போன உப்பு உற்பத்தி

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உப்பு உற்பத்தி முற்றாக முடங்கிப் போயுள்ளதாக உப்புக்கூட்டுத்தாபன தலைவர் நந்தனதிலக...

19 12
இலங்கைசெய்திகள்

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவையின் விசேட அனுமதி

நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உப்பு இறக்குமதிக்கான விசேட அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன்...