Gautam Adani
செய்திகள்அரசியல்இலங்கை

வடக்கிலும் கால்பதிக்கும் அதானி குழுமம்!!

Share

இந்திய தொழில் அதிபர் கௌதம் அதானிக்கு சொந்தமான இந்தியாவின் அதானி குழுமம், மன்னாரில் 1 பில்லியன் டொலர் மதிப்பில் 1,000 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்தை உருவாக்குவதற்கான திட்டத்தை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அதானி நிறுவனம் இரண்டாவது காற்றாலை மின் திட்டத்தை பூநகரி பிரதேசத்தில் உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் இலங்கை மின்சார சபை தலைவரை தொடர்பு கொண்டு கேட்ட போது முதலீட்டு முன்மொழிவுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட முதலீட்டு மேலாண்மைக் குழுவுக்கு BOI பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் BOI ஆல் வரையப்படும் என்றும், BOI நிலையான எரிசக்தி ஆணையகத்தின் (SEA) தலைவர், திறைசேரி செயலாளர் மற்றும் CEB தலைவர் ஆகியோரால் கையெழுத்திடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த முன்மொழிவின் மூலம், அதானி குழுமம் மன்னாரில் 1,000 மெகாவாட் காற்றாலை ஆற்றல் திட்டத்தை உருவாக்கவுள்ளதாகவும் எவ்வாறாயினும், இத்திட்டம் எப்போது ஆரம்பிக்கப்படும் என்பது குறித்து தமக்கு தெரியாது என இ.மி.ச தலைவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், வடக்கில் மூன்று தீவுகளில் சினோ சோர் ஹைபிரிட் தொழில்நுட்பத்தின் கலப்பின ஆற்றல் அமைப்பு திட்டத்தை இடைநிறுத்த சீனா முடிவு செய்துள்ளதாக சீன தூதரகம் கடந்த வியாழக்கிழமை (2) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 58
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு 2வது நாளாகவும் தொடர்ச்சி: பேச்சுவார்த்தையை நிராகரித்தார் சுகாதார அமைச்சர்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ள 48 மணிநேர அடையாளப் பணிப்புறக்கணிப்புப்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமாகமவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே மோதல்: 19 வயது இளைஞன் மரணம்; ஐவர் கைது!

ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில்...

world 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜும்ஆ பிரசங்கங்களின் போது நிதானத்தைப் பேணுமாறு உலமாக்களுக்கு அறிவுறுத்தல்!

நாட்டின் தற்போதைய சூழல் மற்றும் சர்வதேச விவகாரங்களைக் கருத்திற்கொண்டு, ஜும்ஆ பிரசங்கங்களின் போது கதீப்மார்கள் மற்றும்...

world 55
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஆரம்பம்: கொழும்பிலிருந்து 2,300 மேலதிக பேருந்துகள் சேவையில்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக விசேட...