IMG 20211202 WA0041 960x540 1
செய்திகள்இலங்கை

திருகோணமலையில் புதையல் தோண்டிய சந்தேக நபர்கள் கைது

Share

இன்று காலை திருகோணமலை ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புதையல் தோன்றிய குற்றச்சாட்டில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 45 இலிருந்து 65 வயது மதிக்கத்தக்க தோப்பூர், கந்தளாய் மற்றும் ஈச்சிலம்பற்றை சேர்ந்தவர்கள் என்று ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெருகல் மாவடிச்சேனை பகுதி வீடொன்றில் புதையல் தோண்டிய போது வெருகல் பகுதி இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு ஈச்சிலம்பற்று பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்ட இடத்திலிருந்து 2 மண்வெட்டிகள், இரண்டு சவல், அலவாங்கு, கேன் போத்தல், தாச்சி, பிக்காசு, பானை மற்றும் இரண்டு சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட நபர்களை தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொள்ளும் பொலிஸார் மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 6933e6366e508
உலகம்செய்திகள்

கனடாவில் கார் விபத்து: யாழ்ப்பாண இளைஞர் உயிரிழப்பு!

கனடாவில் இடம்பெற்ற கோரமான கார் விபத்து ஒன்றில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 19 வயதான இளைஞர் ஒருவர்...

25 69342677b4982
இலங்கைசெய்திகள்

அதிக விலைக்குத் தண்ணீர் போத்தல் விற்பனை: கடை உரிமையாளருக்கு ரூ. 10 இலட்சம் அபராதம்!

பலாங்கொடை – பெலிஹுல்ஓயா பகுதியில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்குத் தண்ணீர் போத்தலை விற்பனை...

images 3 1
இலங்கைசெய்திகள்

புயல் நிவாரணம்: பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடன் தவணை 6 மாதங்கள் இடைநிறுத்தம் – மத்திய வங்கி அதிரடி அறிவிப்பு!

சமீபத்திய புயல் மற்றும் வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு இலங்கை...

images 4 1
இலங்கைசெய்திகள்

டித்வா புயல் பேரழிவு: சி.டி ஸ்கேன் உட்பட 3 பெரிய மருத்துவமனைகள் சேதம் – 100 சிறிய மருத்துவமனைகள் பாதிப்பு!

‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் அனர்த்தங்களால் நாட்டின் மூன்று பெரிய மருத்துவமனைகளும், சுமார் 100...