aids 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொவிட் தொற்றால் எயிட்ஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

Share

‘சமத்துவமின்மையை ஒழித்து எய்ட்ஸ் நோயை இல்லாதொழிப்போம் – தொற்றுநோய்களை வெல்வோம்’ என்ற தொனி பொருளின் கீழ் இவ்வாண்டு உலக எயிட்ஸ் தினம் கொண்டாடப்படுகின்றது.

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்கள் 363 பேர் கடந்த ஆண்டு இனங்காணப்பட்டிருந்தனர். 2019 ஆம் ஆண்டு இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையை விட குறைவான எண்ணிக்கையே பதிவாகி உள்ளது.

1981 ஆம் ஆண்டு உலகில் முதலாவது எச்.ஐ.வி தொற்றாளர் இனங்காணப்பட்டிருந்தார். இலங்கையில் எயிட்ஸ் தொற்றாளர் 1988 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகளால் 1988 ஆம் ஆண்டு தொடக்கம் டிசம்பர் முதலாம் திகதி உலக எய்ட்ஸ் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

தேசிய பாலியல்சார் நோய்கள் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி எயிட்ஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை கொவிட் தொற்று காரணமாக வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்தார்.

எச்.ஐ.வி பரவல் குறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...