valvettithurai
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இரண்டாவது முறையும் தோற்கடிக்கப்பட்டது பாதீடு!!

Share

வல்வெட்டித்துறை நகர சபையின் பாதீடு மீண்டும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகர சபை பாதீடு தொடர்பான கூட்டம் தவிசாளர் என். செல்வேந்திரா தலைமையில் இன்றைய தினம் நடைபெற்றது.

இதன் போது, பாதீடு திருத்தங்களுடன் சபையில் முன்வைக்கப்பட்டது. இருப்பினும் இப் பாதீடும் தோற்கடிக்கப்பட்டது.

8 உறுப்பினர்கள் பாதீடுக்கு ஆதரவாகவும் 9 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்த நிலையில், ஒரு மேலதிக வாக்கினால் பாதீடு தோற்கடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 17ஆம் திகதி சபையில் முன்வைக்கப்பட்ட பாதீடு தோற்கடிக்கப்பட்ட நிலையிலேயே இன்றைய தினம் திருத்தங்களுடன் பாதீடு முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொரோனாத் தொற்று காரணமாக வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தவிசாளர் கே.கருணாந்தராசா கடந்த ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி உயிரிழந்தார்.

இந்த நிலையில், கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி இடம்பெற்ற தவிசாரர் தெரிவில், புதிய தவிசாளராக என். செல்வேந்திரா ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

இந்த நிலையில் அவரால் முன்வைக்கப்பட்ட இரண்டு பாதீடுகளும் தோற்கடிக்கப்பட்டுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
TNA
இலங்கை

சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டிற்கு வந்த சங்கு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று...

sumanthiran
இலங்கை

சுமந்திரன் வேண்டாம் – வெடித்தது போராட்டம்.

நாளைய தினம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி...

selvam
இலங்கை

தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் ஒன்றிணைவு – சொற்போரில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது...

இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...