valvettithurai
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இரண்டாவது முறையும் தோற்கடிக்கப்பட்டது பாதீடு!!

Share

வல்வெட்டித்துறை நகர சபையின் பாதீடு மீண்டும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகர சபை பாதீடு தொடர்பான கூட்டம் தவிசாளர் என். செல்வேந்திரா தலைமையில் இன்றைய தினம் நடைபெற்றது.

இதன் போது, பாதீடு திருத்தங்களுடன் சபையில் முன்வைக்கப்பட்டது. இருப்பினும் இப் பாதீடும் தோற்கடிக்கப்பட்டது.

8 உறுப்பினர்கள் பாதீடுக்கு ஆதரவாகவும் 9 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்த நிலையில், ஒரு மேலதிக வாக்கினால் பாதீடு தோற்கடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 17ஆம் திகதி சபையில் முன்வைக்கப்பட்ட பாதீடு தோற்கடிக்கப்பட்ட நிலையிலேயே இன்றைய தினம் திருத்தங்களுடன் பாதீடு முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொரோனாத் தொற்று காரணமாக வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தவிசாளர் கே.கருணாந்தராசா கடந்த ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி உயிரிழந்தார்.

இந்த நிலையில், கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி இடம்பெற்ற தவிசாரர் தெரிவில், புதிய தவிசாளராக என். செல்வேந்திரா ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

இந்த நிலையில் அவரால் முன்வைக்கப்பட்ட இரண்டு பாதீடுகளும் தோற்கடிக்கப்பட்டுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...