f01c0efb f43dd4c8 tourism
செய்திகள்இலங்கை

தென்னாபிரிக்க பயணிகளுக்கு தடை! – பிரசன்ன ரணதுங்க

Share

ஒமிக்ரோன் புதிய பிறழ்வால் ஆறு தென்னாபிரிக்க நாடுகளை சேர்ந்தவர்களுக்கு நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

குறிப்பாக தென்னாபிரிக்கா, நமீபியா, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, லெசோதோ மற்றும் சுவிஸ்லாந்து ஆகிய ஆறு நாடுகளைச்சேர்ந்த சுற்றுலாப் பயணிகளே நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த ஆறு நாடுகளை தவிர ஏனைய நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டிற்குள் வர எந்த தடையும் இல்லை.

கடந்த 14 நாட்களில் இந்த நாடுகளை சேர்ந்தவர்கள் நாட்டிற்குள் வரவில்லை என்பதை சுட்டிகாட்டிய அவர், இந் நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் வந்துள்ளார்களா? இல்லையா? என்பது குறித்து உரிய திணைக்களங்கள் ஆராயும். உரிய திணைக்களத்தால் அடையாளம் காணப்பட்டால் அதற்கேற்ப சுகாதாரத்துறையால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் சுட்டிக்காடினார்.

இனி வரும் நாட்களில் விசா வழங்கும் போது சம்மந்தப்பட்ட நாடுகளுக்கு சென்றிருக்கிறார்களா என்பதை அதிகாரிகள் பரிசோதிப்பார்கள் என்பதையும் வழியுறுத்தினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...