corona 2
செய்திகள்உலகம்கட்டுரைவிஞ்ஞானம்

ஆபத்தான ஆபிரிக்கத் திரிபுக்கு ஐ. நா. நிறுவனம் ஏன் “ஒமெக்ரோன்” எனப் பெயரிட்டது?

Share

கொரோனா வைரஸில் இருந்து மாறுபாடடைந்து உருவாகின்ற திரிபுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் கிரேக்க மொழியில் பெயர்களைச் சூட்டி வருகிறது.

திரிபுகளுக்கான பெயர்களின் வரிசையில் கடைசியாக 12 ஆவது இலக்கத்தைக் குறிக்கும் (12th letter of the alphabet) “மு”(mu) என்னும் பெயர் சூட்டப்பட்டிருந்தது. அதன் பிறகு தோன்றிய ஆபிரிக்கத் திரிபுக்கு வரிசைப்படி 13 ஆவது எழுத்தைக் குறிக்கின்ற “நு” (“Nu”) என்ற பெயரோ அல்லது 14 ஆவது கிரேக்க இலக்கத்தைக் குறிக்கின்ற ஜி(“Xi”) என்ற பெயரோதான் சூட்டப்பட்டிருக்க வேண்டும்.

சில குழப்பங்களைத் தவிர்ப்பதற்காகவே இந்த இரண்டு பெயர்களையும் தவிர்த்து விட்டு 15 ஆவது இலக்கத்தைக் குறிக்கின்ற “ஒமெக்ரோன்” என்ற பெயரைச் சூட்ட முடிவுசெய்யப்பட்டதாக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

“நு” (Nu) என்ற பெயர் ஆங்கில வார்த்தையான “நியூ” (New ) என்ற சொல்லுக்கு நெருக்கமான உச்சரிப்பு ஒலியைக் கொண்டிருப்பதால் குழப்பத்தை உருவாக்கும் எனக் கருதி அது தவிர்க்கப்பட்டது. “ஜி” (Xi) என்பது உலக அளவில் பரவலாகப்-பிரபலமாகப் பயன்பாட்டில் உள்ள குடும்பப் பெயர் (family name). அத்துடன் சீன அதிபரது பெயரையும் (Xi Jinping) அது குறிக்கிறது. எனவே தொற்று நோய்க்குப் பெயரிடுவதில் இனம், மொழி, சமூகம், நாடுகள் சார்ந்த குழப்பங்களைத் தவிர்க்கவேண்டும் என்ற நோக்குடன் பெயர் தெரிவுகள்
செய்யப்படுகின்றன என்று ஐ. நா. அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

புதிய திரிபுகள் முதலில் கண்டறியப்படுகின்ற நாடுகளின் பெயர்களில் அழைக்கப்படுவதால் ஏற்படுகின்ற விரும்பத்தகாத விளைவுகளைத் தவிர்ப்பதற்காகவே அவற்றுக்குத் தனித் தனியே பெயர்களைச் சூட்ட முடிவு செய்யப்பட்டது.

இங்கிலாந்து வைரஸ் அல்லது ஆங்கில வைரஸ் என அழைக்கப்பட்ட திரிபுக்கு “அல்பா திரிபு” (Alpha variant) என்று முதலில் பெயரிடப்பட்டது. அதன் பிறகு கொவிட் வைரஸின் பல திரிபுகளுக்கு அவ்வாறு கிரேக்க இலக்கப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. அவற்றில் “கவலைக்குரியது” என்று சுகாதார நிறுவனத்தால் தர நிலைப்படுத்தப்பட்டவற்றில் ஒமெக்ரோன் ஐந்தாவது திரிபு ஆகும்.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...