Dog meat
செய்திகள்உலகம்

நாய் இறைச்சிக்கு தடையா?-கிளம்பியது எதிர்ப்பு

Share

தென்கொரியாவில் நாய் இறைச்சிக்கு தடை விதிக்க அந்நாட்டு பண்ணையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தென் கொரிய அரசாங்கம் நாய் இறைச்சி விற்பனையைத் தடை குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

இதை அங்கு நாய் பண்ணைகள் வைத்திருக்கும் பண்ணையாளர்கள் மிகவும் வன்மையாக கண்டித்துள்ளனர்.

நாய்களை உண்பதால் ஆண்மையைப் பெருக்கலாம் என்ற நம்பிக்கை தென்கொரியாவில் பல நூற்று வருடங்களாக இருந்து வருகிறது.

இதனால் அங்கு பலர் நாய் இறைச்சி விரும்பி உண்கிறார்கள் .

எனினும் தற்போதுள்ள இளைய தலைமுறையினர் இடையில் நாய்களை செல்லப்பிராணியாக வளர்க்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக கடந்த வருடம் முதல் நாய் இறைச்சியின் விற்பனை சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 5ஆண்டுகளுக்கு முன்பாக பல இலட்சக்கணக்கான நாய்கள் உணவுக்காக கொல்லப்பட்ட நிலையில், இவ் வருடத்தில் சுமார் 10 – 15 இலட்சம் நாய்கள் மட்டுமே கொல்லப்படுவதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.

அத்தோடு விலங்கு நல ஆர்வலர்களும் நாய்களை கொல்ல வேண்டாமென அரசாங்கத்திடம் கோரிக்கைகள் வைத்த வண்ணம் உள்ளனர்.

இக்கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே – இன் அறிவித்துள்ளார்.

அவரின் அறிவிப்பை பண்ணையாளர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

எதிர்ப்புக்கள் வந்தாலும் நாய் இறைச்சி விற்பனை தடை தொடர்பில் குழு ஆராயுமென தென் கொரிய ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#world

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...