Maithripala Sirisena
செய்திகள்அரசியல்இலங்கை

அரசின் பெரும்பான்மை சு.க கைகளிலேயே! – மைத்திரிபால சிறிசேன

Share

இந்த அரசின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் என்பது ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கைகளிலேயே தங்கியுள்ளது.” – என்று முன்னாள் ஜனாதிபதியும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார்.

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு பதிலடி கொடுத்து நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சூளுரைத்தார்.

” தேர்தல் காலங்களில் கூட்டணிகளை அமைத்துவிட்டு, அதன் பிறகு அரசுக்குள் மோதல் ஏற்பட்டு கூட்டணி முறிந்தால் என்ன நடக்கும் என்ற பாடத்தை வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த அரசிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் இருக்கலாம். அதில் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் 14 பேர் அங்கம் வகிக்கின்றனர். எனவே, எம்மால்தான் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் பாதுகாக்கப்படுகின்றது.

கூட்டணி ஒற்றுமையை காத்து, நட்புடன் நகரவே நாம் விரும்புகின்றோம். எம்மை தாக்க முற்பட்டால், அவர்களின் வழியில் அல்லாமல் வேறு வழியில் பதிலடி கொடுக்க நாமும் தயார்.” என மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

#SriLankaNews

Share
தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...