நல்லாட்சி அரசாங்கம் செய்த தவறை இந்த அரசாங்கமும் செய்யப்போகிறதா? என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் நேற்று (24) கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், தேர்தல் திருத்தம் வரும்வரை அல்லது அரசியலமைப்பில் திருத்தம் வரும்வரை மாகாணசபைகளுக்கான தேர்தல் நடத்தப்படாது என கூறியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
“நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மாகாணசபை தேர்தல் நடத்தப்படவில்லை. அந்த அரசாங்கத்துக்கு முண்டு கொடுத்துவந்த நாமும் அதனை வலியுறுத்தவில்லை என்பதை பகிரங்கமாக ஏற்றுகொள்கிறேன். இந்த தவறை ஏற்றுகொள்கிறோம்.
நல்லாட்சி அரசாங்கம் செய்த தவறை இந்த அரசாங்கமும் செய்யப்போகிறதா? என வினா எழுப்பிய அவர், . இவ்வாறான நிலையில் கடந்த அரசாங்கம் செய்த தவறை விடுத்து மாகாணசபை தேர்தலை இந்த அரசாங்கம் நடத்த முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment