IMG 8708
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விவாதம் வேண்டும் என்கிறார் ரஞ்சித் மத்தும பண்டார

Share

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் மீண்டும் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கோரிக்கை விடுத்தார்.

இதற்காக இரு நாட்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர் இன்று நாடாளுமன்றத்தில் விடுத்தார்.

” நான் சட்டம், ஒழுங்கு அமைச்சராக இருந்தபோது அரச உளவுப்பிரிவின் அறிக்கையொன்று கிடைத்தது. இது தொடர்பில் சிஐடி மற்றும் ரிஐடி பணிப்பாளர்களுடன் நான் கலந்துரையாடினேன்.

இதன்பிரகாரம் சஹ்ரானை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றன. நீதிமன்றத்தில் நீல பிடியாணை பெறப்பட்டிருந்தது.

ஆனால் 52 நாட்கள் அரசியல் சூழ்ச்சியின்போது சட்டம், ஒழுங்கு அமைச்சு பதவியில் இருந்து நான் மாற்றப்பட்டேன். திடீரென நாமல் குமார என ஒருவர் வந்தார்.கொலை சூழ்ச்சி பற்றி கருத்து வெளியிட்டார். ரிஐடி பணிப்பாளர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நாமல் குமார விவகாரத்துக்கு என்ன நடந்தது? சஹ்ரான் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டது ஏன்?

எனவே, இந்த சம்பவத்தின் பின்னணி என்னவென்பது மக்களுக்கு தெரியும். அவர்கள்தான் இன்று எம்மீது கைநீட்டுகின்றனர்.” – ரஞ்சித் மத்தும பண்டார் மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share
தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...