Simbu
சினிமாபொழுதுபோக்கு

மாநாடு படம் நாளை வெளியாவதில் சிக்கல்: தயாரிப்பாளரின் சோக பதிவு இதோ!

Share

சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாநாடு’ படம் வெளியாவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு.

இப்படத்தின் படப்பிடிப்புகள், பின்னணி வேலைகள் முடிந்து படத்தினை வெளியிடுவது குறித்த திகதியும் அறிவிக்கப்பட்ட நிலையில் மாநாடு படமானது வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

இறுதியாக நவம்பர் 25 ஆம் திகதி வெளியாகும் என அறிவித்து, அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

இந்நிலையில், மாநாடு திரைப்படம் நாளை வெளியாகாது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு.

இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

ஆகவே திட்டமிட்டபடி மாநாடு திரைப்படம் நாளை வெளியாகாது என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

maanaadu

#CinemaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...