Police Curfew
செய்திகள்இலங்கை

மேல் மாகாணத்தில் தொடரும் அதிரடி! – விசேட நடவடிக்கையில் பொலிஸார்

Share

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மேல் மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நேற்று காலை 6 மணி தொடக்கம் – மாலை 6 மணி வரை மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விசேட நடவடிக்கையில், பஸ்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றில் பயணித்த சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போது, முகக்கவசம் அந்நியமாய் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்காத
சுமார் 10 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோருக்கு பொலிஸாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

குறிப்பாக, முகக்கவசம் அணியாத 4 ஆயிரத்து 351 பேருக்கு முகக்கவசம் வழங்கப்பட்டதுடன், முறையாக முகக்கவசம் அணியாத 9 ஆயிரத்து 658 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

11 20
இலங்கைசெய்திகள்

யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் கலந்துக்கொள்ளவுள்ள அநுர..!

கொழும்பில் நாளை (19) நடைபெறவுள்ள யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொள்ளவுள்ளதாக...