ykUMVQD
செய்திகள்அரசியல்இலங்கை

போதிய தெளிவின்மையே போராட்டத்திற்கு காரணம் – ஜனாதிபதி கோட்டாபய

Share

நேற்றைய தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது விவசாயிகள் போராட்டங்களை நடத்துவதற்கு பிரதான காரணம் அவர்களுக்கு போதிய தெளிவூட்டல்கள் இன்மையே என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

குறிப்பாக, விவசாயம் தொடர்பாக அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் சேதன விவசாயத்துக்கு மாத்திரமே எனவும், விவசாயிகளுக்கு போதிய தெளிவுபடுத்தாமை தொடர்பில் உரிய அதிகாரிகள் மீது அதிருப்தி அடைவதாகவும் கூறினார்.

அத்தோடு பசுமை விவசாயக் கொள்கையில் இருந்து கொண்டு தீர்வு பெறுதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு இணங்காத அதிகாரிகள் விலகி செல்வதற்கு எந்த தடையும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

இதன்போது, மாவட்ட ரீதியில் பார்க்குமிடத்து 70 சதவீதமான பயிரிடல் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில், மனசாட்சியின்படி தெளிவாக வேலை செய்யக்கூடிய குழுவொன்றால் மாத்திரமே இவ் வேலைதிட்டத்தை மேற்கொள்ள முடியும் என்பதையும் வலியுறுத்தினார்.

#SrilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...