mahindananda aluthgamage
செய்திகள்அரசியல்இலங்கை

இரசாயன உர இறக்குமதி! – அரசின் கொள்கையில் மாற்றமில்லை

Share

இரசாயன உர இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் எவ்வித தீர்மானத்தையும் இதுவரை எடுக்கவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நெல் மற்றும் மரக்கறி பயிர்ச்செய்கைகளுக்கு தாவர ஊட்டச்சத்துக்கள் எனும் பெயரில் இரசாயன உரம் இறக்குமதி செய்யப்படவுள்ளது என வெளியாகும் தகவலில் உண்மை இல்லை.

இவ் விடயம் தொடர்பில் அரசாங்கம் எந்தவிதமான முடிவுகளையும் எடுக்கவில்லை. மக்களின் நன்மை கருதியே சேதன உர ஊக்கிவிப்பு திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானத்தை மீளப்பெறுவது தொடர்பில் எந்தவிதமான தீர்மானத்தையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை – எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசாங்கம் யூரியாவை இறக்குமதி செய்வதன் மூலம் இரசாயன உரத் தடையை மாற்றியமைத்துள்ளது. அது ‘தாவர ஊட்டச் சத்து’ என பெயர் மாற்றப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, தனது ருவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...