IMG 20211121 WA0075
செய்திகள்இலங்கைபிராந்தியம்

‘கொல்பவன் வெல்வான்’ – வேலணையில் கிளைமோர் மீட்பு

Share

புதைக்கப்பட்ட நிலையில் அதிசக்தி வாய்ந்த கிளைமோர் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது என இலங்கை இராணுவத்தின் யாழ்ப்பாணம் 51ஆவது படைத்தளம் தெரிவித்துள்ளது.

குறித்த கிளைமோர் குண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 4 மணியளவில் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேலணை அம்பிகா நகர் பகுதியில் இந்தக் கிளைமோர் குண்டு மீட்கப்பட்டுள்ளது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து இலங்கை இராணுவத்தின் யாழ்ப்பாணம் 51ஆவது படைத்தள சிறப்புப் பிரிவினரினால் இந்த குண்டு மீட்கப்பட்ட நிலையில் செயலிழக்க வைக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பான ‘கொல்பவன் வெல்வான்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கிளைமோர்க் குண்டு மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளது என இராணுவம் தெரிவித்துள்ளது.

IMG 20211121 WA0069 IMG 20211121 WA0076

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...