Peng Shua
உலகம்செய்திகள்

எங்கே பெங் ஷூவா?-சீனாவை சந்தேகிக்கும் பிரித்தானியா

Share

எங்கே பெங் ஷூவா என சீனாவை பிரித்தானியா கேட்டுள்ளது.

சீனாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை பெங் ஷூவா குறித்த உறுதியான தகவல்களை வெளியிடுமாறு பிரித்தானியா, சீனாவை கோரியுள்ளது.

சீன கொம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பிரதி தலைவரினால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படும் டெனிஸ் வீராங்கனையினால் முறைப்பாடு அளிக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது காணாமல் போயுள்ளார்.

பிரபல டென்னிஸ் வீராங்கனை பெங் ஷூவா காணாமல்போன விடயம் குறித்து தாம் மிகவும் கவலைகொண்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு, இந்த விடயம் தம்மால் உன்னிப்பாக அவதானிக்கப்படுவதாகவும் பிரித்தானிய தெரிவித்துள்ளது.

குறிப்பாக பாலியல் வல்லுறவு போன்ற விடயங்களில் பொதுமக்கள் தமது கருத்துக்களை வெளியிடுவதற்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் எனவும்,

உலகின் எந்தப் பகுதியிலும் பாலியல் வல்லுறவு போன்ற மனித உரிமை மீறும் சம்பவங்களுக்கு எதிராக பிரித்தானியா தொடர்ந்தும் செயற்படும் எனவும் வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

டெனிஸ் வீராங்கனை பெங் ஷூவாய் குறித்து, முன்னதாக அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபையினாலும் கண்டனம் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

35 வயதான பெங் ஷூவாய் இரு முறை இரட்டையர் போட்டிகளில் கிறாண் சிலாம் வெற்றிக்கிண்ணத்தை வென்றிருந்தார் .

அவர் குறித்த விபரங்களை சீனா வெளியிட வேண்டும் என சர்வதேச நடுகல் பலவும் சீனாவுக்கு அழுத்தங்கள் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...