WhatsApp Image 2021 11 17 at 7.35.49 PM
செய்திகள்இந்தியா

“பகலில் மரியாதை! – இரவில் பலாத்காரம்” – இந்தியாவில் பெண்கள் நிலை குறித்து பாலிவுட் நடிகர் சர்ச்சை பேச்சு

Share

“இந்தியாவில் பகலில் பெண்களை வணக்கும் நாம், இரவில் அவர்களை கூட்டுப் பலாத்காரம் செய்கிறோம்” – இவ்வாறு தெரிவித்துள்ளார் பாலிவுட் நகைச்சுவை நடிகர் வீர் தாஸ்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள ஜான் எப் கென்னடி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாலிவுட் நகைச்சுவை நடிகர் வீர் தாஸ் கலந்து கொண்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்படி தெரிவித்த கருத்து மிகப்பெரும் பேசு பொருளாகியுள்ளது.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியா தற்போது பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. பாலியல் பலாத்கார சம்பவங்கள்,
கொரோனாவுக்கு எதிரான போர், , நடிகர் – நடிகைகளுக்கு எதிரான ஒடுக்குமுறை, விவசாயிகள் போராட்டங்கள் என பல பிரச்சினைகளை குறிப்பிடலாம்.

எமது நாட்டில் ஒளி -இருள், நன்மை – தீமை என இரண்டு எதிர் எதிப்பு பக்கங்களும் உள்ளன. இதில் ரகசியம் எதுவும் கிடையாது.

மக்களிடையே அன்பை பரப்புவதுடன், அவர்களை சிறந்தவர்களாக உருவாக்குவதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். பகலில் பெண்களை தீஜ்வாமாக வணங்கும் நம் (இந்தியா) நாட்டில், இரவு வேளையில் அவர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர் – என்றார்.

பாலிவுட் நடிகர் ஒருவர் வேறு ஒரு நாட்டில் பேசும்போது இந்தியா தொடர்பில் இவ்வாறு பேசியுள்ளமைக்கு தற்போது பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில் அவருக்கு எதிராக டெல்லி காவல் நிலையத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர் வழக்கு பதிவு செய்யப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...