Manivannan 1
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழ்த் தேசிய அரசியலை நீர்த்துப்போகச் செய்யாதீர்கள்!!!

Share

தமிழ்த்தேசிய அரசியலை நீர்த்துப்போகச் செய்யாமல் ஒன்றுபட்டு பேரெழுச்சி கொள்ளும் வகையில் செயற்படவேண்டிய காலம் இது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், ஊடக பேச்சாளருமான வி. மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

திட்டமிட்டு சிதைக்கப்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கட்டமைப்புக்களை நிறுவனமயப்படுத்தி வலுப்படுத்துவது தொடர்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்களுடான சந்திப்பு இடம்பெற்றது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் மாநகர முதல்வருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் கடந்த 9.11.2021 அன்று வவுனியாவில் நடைபெற்றது.

கடந்த பல ஆண்டுகளாக தென்னிலங்கை சக்திகளின் நிகழ்ச்சி நிரலில் தமிழ்த்தேசிய அரசியல் திட்டமிட்டு சிதைக்கப்பட்டுவருகின்றது.

அதன் தொடர்ச்சியாகவே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியையும் சிதைத்து அழிக்கும் முயற்சியும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

தமிழ் தேசியவாத சக்திகளை சிதைத்து அழிக்கும் வகையில் நிகழ்த்தப்படும் இச்சதித் திட்டங்களை முறியடித்து தமிழ்த்தேசிய அரசியலை நீர்த்துப்போகச் செய்யாமல் ஒன்றுபட்டு பேரெழுச்சி கொள்ளும் வகையில் செயற்படவேண்டிய காலம் இது.

அண்மை காலத்தில் எமது அமைப்பிற்குள் இருந்து அமைப்பை சிதைப்பதன் மூலம் தமிழ் தேசிய சக்திகளை பல கூறிடும் சதித்திட்டம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கம் விரும்புகின்ற வைகயில் தமிழ்த்தேசிய பரப்பில் பயணிக்கின்ற கட்சிகளின் ஒற்றுமையினைக் குலைத்து சிறு சிறு காரணங்களுக்காக தமிழ்த்தேசிய அரசியலைக் கூறுபோடுகின்றமை சிங்கள தேசியவாதத்தை வலுப்படுத்துகின்றது.

அந்த வகையில் இக் காலத்தின் தேவையறிந்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கட்டமைப்புக்களை நிறுவனமயப்படுத்தி வலுப்படுத்துவது என இக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

எதிர்காலத்தில் தமிழ்த்தேசியம் சார்ந்து இயங்கும் கட்சிகள் மேற்கொள்ளும் மக்கள் நலன் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளிலும் முழுமனதுடன் பங்குபற்றுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

என்றும், எதிர்காலத்தில் தமிழ்த்தேசிய அரசியலினை சிதைக்காத வகையில் தமிழ்த்தேசிய பரப்பில் பயணிக்கும் கட்சிகளுக்குள் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தி ஒற்றுமையுமையுடன் பயணித்து எமது அரசியல் இலட்சியத்தையும், பொருளாதார சுபீட்சத்தையும் வென்றெடுக்க போராடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

சுமார் 5 மணி நேரம் இக்கலந்துரையாடல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...