moon
செய்திகள்இந்தியா

கார்த்திகை 19ல் நடக்கபோவதென்ன?

Share

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திரகிரகணம் கார்த்திகை 19ல் தென்பட போகிறது.

மிகப்பெரிய சந்திர கிரகணம் இம்மாதம் அதாவது கார்த்திகை 19ஆம் திகதி தென்படவுள்ளது.

அக்கிரகணம்தான் இந்நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திரகிரகணமாகும்.

இது இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அஸ்ஸாமின் வடகிழக்குப் பகுதிகளில் மிகக் குறுகிய நேரத்திற்குத் தெரியும் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருவதே சந்திரகிரகணம் என்று அழைக்கப்படும்.

இந்த நிகழ்வு பெளர்ணமி நாளில் தான் ஏற்படுகின்றன.

சந்திரன் மீது விழக்கூடிய சூரியனின் ஒளியை பூமி முழுவதுமாக மறைத்தால் அது முழு சந்திரகிரகணம் என்றும், சூரிய ஒளியை பகுதியளவு மறைத்தால் அது பகுதி சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.

கார்த்திகை 19ஆம் திகதியன்று 12:48 க்கு தொடங்கி 16:17க்கு முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அடுத்த சந்திர கிரகணம் 2022 ஆம் ஆண்டு கார்த்திகை 8ஆம் திகதி கண்களுக்கு தெரியுமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை அதிகரிப்பு: மயூரு நெத்தி குமாரகேவின் விளக்கம் மற்றும் பின்னணி

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை...

09 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மோட்டார் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி: புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து!

நீண்ட காலமாகத் தேக்கமடைந்திருந்த மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம்,...

08 9
உலகம்செய்திகள்

லெபனானில் போர் மோதல் தீவிரம்: சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு!

லெபனானில் தற்போது இடம்பெற்று வரும் கடுமையான போர் மோதல்கள் காரணமாக, சுமார் 7 லட்சம் மக்கள்...

07 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலையேற்றம்: பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணம் 5 சதவீதத்தால் உயர்வு!

எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றத்தைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 10) முதல் அமுலுக்கு வரும்...